ஆன்லைன் சூதாட்டத்தை ஊக்குவிக்கும் செயலிகளுக்கு விளம்பரம் செய்யக்கூடாது என சமூக வலைதள பிரபலங்களுக்கு மத்திய அரசு ஒளிபரப்பு துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. ஐபிஎல் போட்டிகள் தொடங்கியிருக்கும் நிலையில் சமூக வலைத்தள நிறுவனங்களும் தங்களது பயனர்களுக்கு இந்த சட்ட விரோத நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதனை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.