சென்னையில் இருந்து பிட்ராகுண்டா செல்லும் விரைவு ரயில் வருகின்ற மார்ச் 3ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆந்திர மாநிலம் பிட்ரா குண்டா – சென்னை சென்ட்ரல் இடையே வார நாட்களில் அதாவது திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் சேவை பராமரிப்பு பணி காரணமாக வருகின்ற மார்ச் 3ஆம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.