தமிழகத்தில் நவகிரக கோவில்களுக்கு கூடுதலாக ஏசி பேருந்து இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், கும்பகோணத்திலிருந்து கடந்த 24 ஆம் தேதி முதல் ஒரு பேருந்து இயக்கப்படுகிறது. இதற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து கூடுதலாக ஏசி பேருந்து மார்ச் 25ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. இதற்கு 1350 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.