ரோடமைன் பி ரசாயனம் கலந்த பஞ்சுமிட்டாய் மற்றும் கோபி மஞ்சூரியனுக்கு கர்நாடக மாநிலத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே  தமிழகத்திலும் ரோடமைன்- பி-க்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் உணவகங்களில் இது போன்ற செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்தப்படுகிறதா என ஆய்வு மேற்கொள்ள உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. தடை செய்யப்பட்ட நிறமூட்டியை கலப்பது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.