ஆண்டுக்கு 5 கோடி ரூபாய்க்கு மேல் விற்று முதல் ஈட்டும் நிறுவனங்கள் வருகின்ற மார்ச் 1ஆம் தேதி முதல் மின்னணு ரசீது இன்றி E-Way பில்லை உருவாக்க முடியாது. ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாநிலங்களுக்கு இடையே ஐம்பதாயிரத்திற்கும் மேல் சரக்குகள் பரிமாற்றத்திற்கு E-Way பில் கட்டாயம். வரி செலுத்துவோரில் சிலர் மின்னணு ரசீது உருவாக்க தகுதி உடையவராக இருந்தோம் அதனை இணைக்காமல் E-Way பில்லை போடுவது கண்டறியப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.