கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக தனக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக பாலிவுட் பிரபல நடிகை சுஷ்மிதாசென் கூறியுள்ளார். இது குறித்து இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டிருந்ததாவது, மாரடைப்பு ஏற்பட்ட பின் ஆஞ்சியோ பிளாஸ்டிஸ் சிகிச்சை செய்யப்பட்டு ஸ்டென்ட் பொருத்தப்பட்டிருப்பதாகவும் தனக்கு பலமான இதயம் இருப்பதாக மருத்துவர் குறிப்பிட்டதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது குணமடைந்து வருவதாகவும் கூறியுள்ளார். அதாவது இதயத்திற்கு செல்லும் முக்கிய ரத்த நாளத்தில் 95% தடை ஏற்பட்டதால் தனக்கு மாரடைப்பு ஏற்பட்டிருந்ததாக அவர் கூறியுள்ளார். மேலும் மருத்துவர்களுக்கும் தான் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்து கொண்ட ரசிகர்களுக்கும் மனமார்ந்த நன்றி என சுஷ்மிதாசென் நெகழ்ச்சி பொங்க கூறியுள்ளார்.