இந்தி சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் சயீப் அலிகான், நடிகை கரீனா கபூரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்தி நடிகை மலைகா அரோராவின் தாயார் பிறந்தநாள் விருந்து நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சயீப் அலிகான், கரீனாகபூர் ஆகிய இருவரும் பங்கேற்றனர். விருந்து முடிந்து 2 பேரும் காரில் வீட்டுக்கு திரும்பினர். இந்நிலையில் வீட்டின் எதிரில் போட்டோகிராபர்கள் காத்திருந்தனர்.

அதன்பின் சயீப் அலிகான் மனைவியுடன் வந்தபோது இருவரையும் போட்டோ எடுக்க அவர்கள் முண்டியடித்தனர். அதோடு அவர்களை பின்தொடர்ந்து கேட்டை தாண்டி அத்துமீறி வீட்டின் கட்டிட வளாகத்துக்குள் சென்று விட்டனர். இதன் காரணமாக ஆத்திரமடைந்த சயீப் அலிகான், தங்களது படுக்கை அறைக்கு வந்துவிடுங்கள் என கத்தினார். இதுகுறித்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.