தமிழ் சினிமாவில் விஜய் உடன் தமிழன் எனும் திரைப்படத்தில் அறிமுகமாகிய பிரியங்கா சோப்ரா, பின் இந்தியில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்து பாப் பாடகர் நிக் ஜோனசை திருமணம் செய்து அமெரிக்காவில் குடியேறி உள்ளார். இதனிடையே பிரியங்காவுக்கு பாடகியாக ஆசை இருந்தது. அதன்படி அவரே பாடல் எழுதி பாடி இன் மை சிட்டி, எக்ஸாடிக் ஆகிய 2 இசை ஆல்பங்களை வெளியிட்டார். எனினும் அவற்றுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

இதன் காரணமாக அவர் வருத்தத்தில் உள்ளார். இது தொடர்பாக பிரியங்கா சோப்ரா பேட்டி அளித்தபோது “என் இசை பயணம் அவ்வளவு நன்றாக போகவில்லை. இசையில் நான் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது பல இருக்கிறது. அதற்குரிய பயிற்சிகள் எடுக்காமல் இதுபோன்ற பாடல் ஆல்பங்கள் தயாரிக்கக்கூடாது என முடிவு செய்துகொண்டேன். அதே நேரம் நடிகையாக என் படங்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டி இருக்கிறது. ஆகவே மியூசிக் ஆல்பம் தயாரிப்பதிலிருந்து கொஞ்சம் இடைவெளி எடுத்துக்கொள்கிறேன்” என்று கூறினார்.