இந்தி சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் கியாரா அத்வானி அண்மையில் நடிகர் சித்தார்த் மல்கோத்ராவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் அத்வானி அளித்துள்ள பேட்டியில், ”சித்தார்த் மல்கோத்ராவை சில ஆண்டுகளாக காதலித்து அண்மையில் மணந்தேன். காதலித்த நபரையே திருமணம் செய்வது என்பது அதிர்ஷ்டம்.

காதலை திருமண மேடை வரை கொண்டு போகும்போது அந்த மகிழ்ச்சி வேற லெவலில் இருக்கும். காதலித்தவரே என்றாலும் கூட மண மேடையில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும் போதும் பின் தாலி கட்டும் நிகழ்வின்போதும் ஏற்படும் அந்த சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது” என்று அவர் கூறியுள்ளார்.