தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா. இவர் பாலிவுட்டிலும் அதிக படங்களில் நடித்துள்ள நிலையில், கடந்த 1996-ம் ஆண்டு சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார். இந்நிலையில் பிரபல பாடகர் கங்கை அமரன் சில்க் ஸ்மிதா பற்றி பேசிய விஷயம் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அவர் கூறியதாவது, நானும் சில்க் ஸ்மிதாவும் நல்ல நண்பர்களாக இருந்தோம். ஷூட்டிங் இல்லை என்றால் சில்க் உடனே என் வீட்டுக்கு வந்து விடுவார். அவர் என் மனைவியுடன் சேர்ந்து சமையல் செய்து மகிழ்ச்சியாக சாப்பிடுவார். அப்போது பிரேம்ஜி அமரன் சிறிய குழந்தையாக இருந்தான்.

அவனை நான் திருமணம் செய்து கொள்ளட்டுமா என்று சில்க் ஸ்மிதா விளையாட்டாக கேட்பார். நானும் திருமணம் செய்து கொள் என்று கூறுவேன். பிரேம்ஜியை பார்க்கும் போதெல்லாம் சில்க் ஸ்மிதா ஓடி வந்து கட்டி பிடித்துக் கொள்வார். கிராமத்தில் இருந்து வந்த போதிலும் சில்க் ஸ்மிதா சினிமாவில் தன்னை மெருகேற்றி முன்னணி நடிகையாக உயர்ந்தார். அவர் இறந்த செய்தியை கேட்டு நான் அதிர்ச்சியில் உறைந்து விட்டேன். எனக்கு ஒரு வாரமாக காய்ச்சல் வந்து விட்டது என்று கூறியுள்ளார். மேலும் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறை  மையப்படுத்தி ஹிந்தியில் தி டர்ட்டி பிச்சர் என்ற படம் வெளியான நிலையில் அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கதாகும்