வயது வித்தியாசமின்றி மாரடைப்பால் இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ம.பி இந்தூரில் 16 வயது மாணவி பிருந்தா திரிபாதி பள்ளியில் மாரடைப்பால் உயிரிழந்தார். 11ம் வகுப்பு படித்து வந்த அவர் வகுப்பில் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் ஜனவரி 25ஆம் தேதி நடைபெற்றது. மாணவி சம்பவத்தன்று குடியரசு தின விழாவிற்கான ஒத்திகைக்காக பள்ளிக்கு சென்றுள்ளார்.

அப்போது மயக்கம் போட்டு விழுந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து மாணவி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மருத்துவர்கள் சிபிஆர் குறித்து கொடுத்துள்ளனர். ஆனாலும் உயிரை காப்பாற்ற முடியவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் மாணவி மருத்துவமனைக்கு அழைத்து வருவதற்கு முன்னதாகவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதய செயலிழப்புக்கு முன்னதாக பிருந்தா முற்றிலும் நலமாக இருந்தார் எனவும் அவர் அதிக குளிர்ச்சியால் இறந்திருக்கலாம் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளதாக மாணவியின் உறவினர் கூறியுள்ளனர்.

மாவட்ட மருத்துவமனையில் மாணவியின் உடற்கூராய்வில் மயக்கம் போட்டு விழுந்ததன் காரணமாக கன்னத்தில் காயம் ஏற்பட்டிருக்கலாம் என்றும், மேலும் அவர் மாரடைப்பால் இறந்தார் என்றும் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். சிறுமி இறக்கும் பொழுது மெல்லிய ட்ராக் சூட் அணிந்து இருந்ததாகவும் அவளுடைய வயிற்றில் சிற்றுண்டி துகள்கள் காணப்பட்டதாகவும் கூறினார்.