ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மருத்துவ தம்பதி உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலிசார் மற்றும் தீயணைப்பு படையினர், பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.