2023ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 31 முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறவுள்ளது. வரும் பிப்ரவரி 1ம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. இதையடுத்து பட்ஜெட்டை தயாரிக்கும் ஊழியர்களை அங்கீகரிக்கும் விதமாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது கையால் அல்வா கிண்டி வழங்கினார்.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதால், பாஜக தலைமையிலான இந்த ஆட்சியின் கடைசி பட்ஜெட்டாக இது இருக்கிறது. இந்நிலையில் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 26,000 பணம் 3 தவணைகளாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2023 பட்ஜெட்டில் இத்திட்டத்தின் தவணையை உயர்த்தி வழங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தவணை தொகை 6,000-லிருந்து 8,000 ஆக உயர்த்தப்படும் என்றும், விவசாயிகளுக்கு 2,000 வீதம் 4 தவணைகளாக பிரித்து வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.