ஆந்திரா மாநிலத்தில் உள்ள கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரின் இளைய மகளுக்கு திருமணம் முடிவு செய்து திருமணத்திற்கான மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து எப்படியோ ஒரு ஆண்மகனை முடிவு செய்து மகளுக்கு ஒரு மணமகனை தேர்வு செய்து திருமணம் நிச்சயக்கப்பட்டது. என் நிலையில் தனது மகளின் திருமணத்தை வித்தியாசமாக ஆக்க முடிவு செய்த வெங்கடேஷ் அழைப்பிதழை வித்தியாசமாக வடிவமைத்துள்ளார்.

அதாவது இந்தியாவில் பயன்படுத்தும் 2000 ரூபாய் நோட்டை போல அதே அளவில் மணமகள் மற்றும் மணமகன் ஆகியோர் பெயர்களை முன்புறத்தில் அச்சடித்தார். பின்புறத்தில் திருமணம் தொடர்பான விவரங்களை பதிவு செய்தார். இந்த திருமண அழைப்பிதழை வாங்கிய உறவினர்கள் 2000 ரூபாய் நோட்டை வாங்கியதாகவும் தெரிவித்துள்ளனர். அவ்வகையில் இவர் தன்னுடைய மூத்த மகளின் திருமணத்திற்காக அழைப்பிதழை ஏடிஎம் கார்டு வடிவில் அடித்துள்ளார் என்பதால் இந்த அழைப்புகள் பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை. இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.