ராஜஸ்தான் மாநிலம் சிரோகி மாவட்டத்தில் சியாகாரா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 3 மகள்கள் இருக்கும் நிலையில், மூத்த மகள் கிஷ்ணாவை ரமேஷ் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த நாராயணன் ஜோகி என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். திருமணம் முடிந்த பிறகு மகள் மற்றும் மருமகன் அடிக்கடி ரமேஷ் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது மாமியாருக்கும் மருமகனுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட, ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர்.

அதன்படி புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மருமகன் மாமனாருக்கு மது ஊற்றி கொடுத்துள்ளார். இதில் போதை தலைக்கேறியதால் மாமனார் மயங்கி விழுந்து விடுகிறார். இதனையடுத்து மருமகனும் மாமியாரும் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு ஓடிப் போய் விட்டனர். இந்த விவகாரம் மறுநாள் காலை ரமேஷுக்கு தெரிய வர, இது குறித்து அவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.