இந்தியாவில் முக்கிய தினங்கள் மற்றும் தேசிய தலைவர்களின் நினைவு தினங்கள் போன்ற நாட்களில் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி டெல்லியில் நவம்பர் 19 சூரிய சஷ்டி தினம் அனுசரிக்கப்பட உள்ள நிலையில் அன்றைய தினம் உள்ளூர் நாளாக அரசு அறிவித்துள்ளது.

திருவிழாவை முன்னிட்டு டெல்லி மாநிலம் முழுவதும் உள்ள மது கடைகள் அனைத்தும் மூட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் கிழக்கு உத்திரபிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களை பூர்வீகமாகக் கொண்ட மக்கள் சூரியனை வழிபடும் ஒரு முக்கிய திருவிழாவாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.