2023-24 பட்ஜெட் உரையின் போது மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் யுபிஎஸ்சி தேர்வுகளுக்காக படித்து வரும் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும் இதர தேவையான வசதிகளை செய்து கொடுக்கும் விதமாக ஒரு திட்டத்தை செயல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், UPSC தேர்வுக்கான ஊக்கத்தொகைக்காக நடத்தப்படும்.

மதிப்பீட்டுத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 10.09.23 அன்று இந்த மதிப்பீட்டுத் தேர்வு நடைபெற உள்ளது. இதன் மூலம் 1000 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு, ஊக்கத்தொகையாக 7,500 வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்படும். இதற்கு https: //naanmudhalvan.tn.gov.in/ என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாளாகும்.