அமைப்புசாரா தொழிலாளர்களுக்காக பிரதமர் ஷ்ரம் யோகி மன் தன் யோஜனா என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் அமைப்பு சாரா தொழிலாளர்களும் பென்ஷன் போன்ற பணி ஓய்வு கால பலன்களை பெற முடியும். இந்த திட்டத்தில் மாதம் 55 ரூபாய் முதலீடு செய்து வந்தால் போதும் ஆண்டுக்கு 36 ஆயிரம் ரூபாய் அதாவது மாதம் 3000 ரூபாய் பென்ஷன் பெறலாம். இந்த திட்டத்தில் 60 வயது வரை நீங்கள் கட்ட வேண்டும். பயனாளி இறந்தால் அவரது கணவர் அல்லது மனைவிக்கு பென்ஷன் கிடைக்கும். இந்த திட்டத்தில் முதலீடு செய்ய அருகில் உள்ள பொது சேவை மையத்தை அணுகவும்.