தமிழகத்தில் கடந்த வாரம் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் மக்கள் பெரிய பாதிப்புகளை சந்தித்துள்ளனர். இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழையால் சான்றிதழ்களை இழந்தவர்கள் அதன் நகல்களை பெறுவதற்கு டிசம்பர் 30ம் தேதி இன்று சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் தங்கள் விவரங்களை பதிவு செய்து சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என நெல்லை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் கல்லூரி பல்கலைக்கழகச் சான்றிதழை இழந்த மாணவர்கள் www.mycertificates.in என்ற இணையதளம் மூலம் கட்டணம் இல்லாமல் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.