தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு எழுதிய உதவித்தொகை பெறும் வாய்ப்பை முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்துள்ளார். அதன்படி தமிழகத்தில் ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுவார்கள். அதில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 500 மாணவர்கள் மற்றும் 500 மாணவிகள் இடம்பெறுவர். இவர்களுக்கு ஒரு கல்வியாண்டில் தலா பத்தாயிரம் ரூபாய் அதாவது ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்படும். பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடிக்கும் வரை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான முதலமைச்சர் திறனாய்வு தேர்வு அக்டோபர் ஏழாம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஹால் டிக்கெட் இணையத்தில் வெளியாகி உள்ளது. மாணவர்கள் dge.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக தங்களது ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெரும் ஆயிரம் பேருக்கு இளங்கலை பட்டப்படிப்பு வரை மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.