தமிழ்நாட்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வானது இன்றோடு  முடிவடைந்து கோடை விடுமுறை விடப்படுகிறது. 1 – 12ம் வகுப்புவரையான மாணவர்களுக்கு 2022 – 23 ஆண்டுக்கான வகுப்புகள் கொரோனா தொற்றால் சற்று தாமதாமாக தொடங்கியது. இருந்தாலும், கொரோனா பாதிப்பானது சற்று குறைந்ததால் திட்டமிட்டபடி பொது, இறுதித்தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களும் தேர்வை சிறப்பாக எழுதி முடித்துள்ளனர். இந்நிலையில் பள்ளி நாட்காட்டியின் படி பள்ளி வேலை நாள் இன்றே கடைசி ஆகும். இதனால் இன்று முதல் விடுப்பு விடப்பட்டு மீண்டும் ஜூன் முதல் வாரத்தில் திறக்கப்பட உள்ளது.