புதுச்சேரி அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களுக்கு வாரத்தில் 2 மணி நேரம் வேலை நேரம் குறைக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி, அணைத்து வெள்ளிக்கிழமை அன்று காலை 9 மணிக்கு பதில் 11 மணிக்கு வேலைக்கு வந்தால் போதும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மேலும், தனியார் நிறுவனங்களும் இதை பின்பற்றுவார்கள் என நம்பிக்கை உள்ளது எனவும் முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். இதற்கு பதிலலிக்கும் விதமாக புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், “பெண்கள் லேட்டாக வராமல் லேட்டஸ்ட்டாக வரலாம்” என கூறியுள்ளார்.