தமிழகத்தில் 5 மாநிலங்களில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஒவ்வொரு கட்சியினரும் தேர்தல் வாக்குறுதிகளை அடித்து வருகின்றனர். அதன்படி காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஒரு கிலோ மாட்டு சாணம் இரண்டு ரூபாய்க்கு வழங்கப்படும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.

ராஜஸ்தான் உட்பட ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஏற்கனவே சிலிண்டர் 500 ரூபாய், குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுதோறும் பத்தாயிரம் ரூபாய் போன்ற கவர்ச்சிகர அறிவிப்புகளை வெளியிட்டுள்ள காங்கிரஸ் தற்போது மாட்டு சாணத்தையும் விலைக்கு வாங்குவோம் என அறிவித்துள்ளது.