ஆப்பிரிக்க நாட்டில் மகண்டல மக்கள் சூடான் நாட்டில் வாழும் பழங்குடியின மக்கள் ஒரு தரப்பினர் பசுக்களின் சிறுநீரை குளிப்பதற்கு பயன்படுத்துகின்றனர். அத்தோடு பசுக்கள் போடும் சாணத்தை அவர்கள் சூரிய வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் சன் ஸ்கிரீன் கிரீமாக பயன்படுத்துகின்றனர்.

இந்த கிராமத்தில் பசுக்களுக்கு இயந்திர துப்பாக்கிகளை கொண்ட காவலர்கள் பணிக்கு நிறுத்தப்படுகிறார்கள். அங்கே மாடுகளின் சிறுநீர் குளிப்பதற்கு மட்டுமல்லாமல்  வீடுகளில் தெளிப்பதற்கும், பல் துலக்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இந்த விசித்திரமான பழங்குடி மக்கள் தற்போதும் வாழ்ந்து வருகின்றனர்.