உத்தரபிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் பதற்றத்தை ஏற்படுத்திய ஒரு சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. பிஜிஐ காவல் நிலையப் பகுதியில் பதிவான இந்த சம்பவத்தில், ஒரு டெலிவரி பாய் மீது சிறைத்துறை அதிகாரி ஒருவர் கடுமையாக தாக்குதல் நடத்திய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் கடந்த ஜூலை 2-ஆம் தேதி நடந்ததாக கூறப்படுகிறது.
தகவலின்படி, ஆதித்யா யாதவ் என்ற டெலிவரி பாய் சைனிக் நகரில் வசித்து வருகிறார். அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சம்பவ நாளன்று, தெலிபாக் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு பொருட்கள் டெலிவரி செய்யச் சென்றார்.
लखनऊ के तेलीबाग स्थित सैनिक नगर इलाके से सामने आया एक चौंकाने वाला वीडियो। पहली मंजिल पर सामान देने से इनकार करने पर एक डिलीवरी ब्वॉय की बेरहमी से पिटाई कर दी गई। पिटाई करने वाला व्यक्ति जेल विभाग का अधिकारी बताया जा रहा है। पूरी घटना का वीडियो सोशल मीडिया पर तेजी से वायरल हो रहा… pic.twitter.com/Esijid93jb
— NBT Hindi News (@NavbharatTimes) August 6, 2025
அந்த வீட்டில் இருந்த பெண், டெலிவரி பாயிடம் “முதல் மாடிக்கு வந்து பொருட்களை கொடுக்கவும்” என்று கூறியதற்கு, அவர் “மேலே வர ரூ.200 கூடுதலாக செலவாகும்” என மறுத்துள்ளார். இதனால் கோபமடைந்த அந்த பெண், தனக்குத் தெரிந்த ஒருவரை அழைத்தார்.
சில நிமிடங்களிலேயே, ஒரு எஸ்யூவி காரில் வந்தவர், சிறைத்துறை அதிகாரி என கூறப்படுகிறார். அவர் வந்தவுடன் ஆதித்யாவை தாக்கத் தொடங்கினார். கை முறுக்கி கீழே தள்ளினார், மொபைல் போனை பறித்துக் கொண்டு வாசலுக்கு வெளியே துரத்தினார். இந்த அக்கிரம செயல்கள் அனைத்தும் சிசிடிவி மற்றும் கைபேசி வீடியோக்களில் பதிவாகி, சமூக ஊடகங்களில் தற்போது பரவி வருகிறது.
இந்த வீடியோவை மூத்த போலீசார் கவனத்தில் எடுத்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து பிஜிஐ காவல் நிலையம் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட அதிகாரியை தேடி போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
