மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் மாவட்டம் காந்திநகர் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை நடந்த சம்பவத்தில் 8 வயது சிறுவன் ரோஹித் உயிரிழந்தான். பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுவன், காலி நிலத்தில் உள்ள பழைய செங்கல் சுவரை ஏற முயன்றபோது, அது திடீரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவம் சிசிடிவி காட்சிகளில் தெளிவாக பதிவாகியுள்ளதால், அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் மிகுந்த அதிர்ச்சியிலும், வேதனையிலும் உள்ளனர்.

சம்பவம் நடந்த காலி நிலம் பானுபிரதாப் சிங் என்பவருக்கு சொந்தமானது. அங்கு பழைய மற்றும் மிகவும் சேதமடைந்த நிலையில் சுவர் இருந்ததாகவும், இதனை பொதுமக்கள் முன்பே எச்சரித்திருந்தும் உரிமையாளர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

குழந்தைகள் அப்பகுதியில் விளையாடக்கூடிய மரத்தில் ஊஞ்சல் கட்டப்பட்டிருந்த நிலையில், அந்த பகுதியில் பலரும் சுவர் அபாயகரமானது என ஏற்கனவே தெரிவித்திருந்தனர். சிசிடிவி காட்சிகளில், ரோஹித் சுவரில் ஏற முயன்றதும், அது உடைந்து அவன் மீது விழுந்ததும் தெளிவாக காணப்படுகிறது.

அருகில் இருந்த குழந்தைகள் உடனடியாக அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்து, அவனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்தனர். ஆனால் துரதிருஷ்டவசமாக மருத்துவர்கள் சிறுவன் உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். காவல்துறையினர் தற்போது உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.