நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சாய்ந்தது. இந்நிலையில் அமைச்சர் ஆர்.கே.பன்னீர்செல்வம் நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் காடந்தேத்தி ஊராட்சியில் வயலில் மழையால் சேதமடைந்த நெற்பயிர்களை நேரில் ஆய்வு செய்துள்ளார்.

அப்போது நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், ஆத்மா குழு தலைவர் மகா குமார், உழவர் நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை, வேதாரண்யம் நகர்மன்ற தலைவர் புகழேந்தி, வேளாண்மை உதவி இயக்குனர் கருப்பையா மற்றும் வேளாண் அலுவலர்கள் விவசாயிகள் உடன் இருந்தனர். இந்த ஆய்வின் போது விவசாயிகள் சேதமடைந்த நெற்பயிர்களை எடுத்து அமைச்சரிடம் காண்பித்தனர்.