தெலுங்கு சினிமாவிலுள்ள பல நடிகர்கள் சொந்தமாக படத் தயாரிப்பு நிறுவனங்களை வைத்துள்ளனர். மேலும் சிலர் ஸ்டுடியோக்களையும் நடத்தி வருகின்றனர். இது தவிர தியேட்டர் தொழிலிலும் இறங்கியுள்ளனர். பிரபல முன்னணி நடிகரான மகேஷ் பாபு, ஏசியான் சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து ஹைதராபாத்தில் எஎம்பி சினிமாஸ் எனும் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களை திறந்தார்.

அவரை தொடர்ந்து அதே நிறுவனத்துடன் இணைந்து “எஎஎ சினிமாஸ்” எனும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் ஒன்றை புஷ்பா நடிகர் அல்லு அர்ஜுன் திறக்கவுள்ளார். ஹைதராபாத்தில் ஏசியன் சத்யம் மால் எனும் மாலில் எஎஎ சினிமாஸ் 5 தியேட்டர்களுடன் வரும் ஜுன் 14ம் தேதி திறக்கப்படவுள்ளது. அவற்றில் ஒன்று எபிக் தியேட்டராக உருவாக்கப்பட்டு உள்ளது.