மறைந்த கேப்டன் விஜயகாந்த்தின் படத்திறப்பு விழா, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் வரும் 24ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில், கேப்டன் நினைவிடத்தில் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி வரும் ஜன.24 புதன்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் தலைமை கழக நிர்வாகிகள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், கழக சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கலந்து கொள்ளவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.