தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் இடைவிடாத கனமழை பெய்து வருவதால் சென்னையில் உள்ள அனைத்து பூங்காக்களையும் மூட மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மழை வெள்ளம் சென்னை சாலைகள் மற்றும் பூங்காக்களை ஆக்கிரமித்துள்ளது. இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக பூங்காக்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்த உத்தரவு வரும் வரை பூங்காக்களை திறக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.