புயல் காரணமாக டிசம்பர் 4ம் தேதி வரை தமிழக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. வங்கக்கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை மறுநாள் புயலாக உருவாகயிருக்கிறது. இதனால் தமிழக கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசவிருக்கிறது.

மேலும், நெருங்க, நெருங்க காற்றின் வேகம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இதனால், டிசம்பர் 4ம் தேதி வரை யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.