தமிழகத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுடன் அதிகாரிகள் 24*7 நேரமும் தொடர்பில் இருக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மழை பாதித்த பகுதிகளை நேரில் ஆய்வு செய்த முதல்வர், நிவாரண முகாம்களில் உள்ள மக்களுக்கு தேவையான உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட பொருட்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் அனைத்து துறைகளும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும் எனவும் மழையால் மக்கள் யாரும் பாதிக்கப்பட கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளார்.