சென்னையில் பல இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் சென்னை, பீர்க்கன்காரணை புதுபெருங்களத்தூரில் உள்ள திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (23) குடைபிடித்தபடி செல்போன் பேசிக்கொண்டே, சாலையில் தேங்கிய மழைநீரில் நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென அவர் துடிதுடித்து கீழே விழுந்து இறந்தார்.

மின்னல் தாக்கியதில் செல்போனில் ஏற்பட்ட மின்கசிவால் அவர் இறந்திருக்கலாம் இல்லாவிட்டால், செல்போனில் இருந்த அதிகப்படியான சார்ஜ் காரணமாக திடீர் மின்கசிவு ஏற்பட்டு அவர் இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.