மறுமணம் செய்து கொள்ளும் விதவைகளுக்கு 2 லட்சம் உதவி தொகை வழங்கப்படும் என ஜார்க்கண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது. இது குறித்து பேசிய சமூக நலத்துறை செயலாளர் மனோஜ் குமார், விதவைகள் கண்ணியத்துடன் வாழ்வதற்கு இந்த திட்டம் உதவும் என்றார். மேலும் விதவைகள் தங்கள் திருமணச் சான்றிதழ் உடன் விண்ணப்பித்தால் ஒரு வருடத்தில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும் அவர் கூறினார்.