இந்தியாவில் அத்தியாவசிய மருந்துகளுக்கான விலை 12 சதவீதம் உயரும் என்ற தகவலுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. 90 ரூபாய் முதல் 261 ரூபாய் வரையிலான மருந்துகளுக்கு 0.00551% விலை உயர்வு நடப்பு ஆண்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சில செய்தி நிறுவனங்கள் மருந்துகளுக்கு 12 சதவீதம் விலை உயர்த்தப்படுகின்றது என தவறான தகவலை வெளியேற்றன.

இதனால் நீரிழிவு, ரத்த கொதிப்பு மற்றும் இதய நோய் போன்ற நீண்ட காலமாக மருந்துகளை உட்கொண்டு வருபவர்கள் கலக்கமடைந்தனர். இந்த நிலையில் இந்த தகவலுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் புதிய விலை உயர்வு 0.1 பைசாவிற்கு குறைவாகவே இருக்கும் என்றும் மருந்துகளை வாங்குவோர் இதனால் அச்சப்படத் தேவையில்லை என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.