புதுச்சேரியில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்ற வருகிறது. இந்த நிலையில் திருபுவனை தொகுதியில் பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்திற்கு முதல்வர் ரங்கசாமி வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், நமச்சிவாயம் வெற்றி பெற்றால் மாநில வளர்ச்சிக்கு தேவையான நிதி கிடைக்கும்.

தேர்தல் முடிந்தவுடன் ரேஷன் கடைகள் திறக்கப்பட்ட கோதுமை மற்றும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் மானிய விலையில் வழங்கப்படும். இதுவரை தங்களின் ஆட்சி காலத்தில் சாலைகள் போடப்பட்டு, முதியோர் உதவித்தொகை மற்றும் கல்வி உதவித்தொகை என பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.