மாத்திரை அட்டையில் சிவப்பு கோடு இருந்தால் அவற்றை மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே உட்கொள்ள வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. பொதுவாக ஆண்டிபயோட்டிக் மாத்திரையில் தான் இது போல சிவப்பு கோடுகள் இருக்கும். மருத்துவர் பரிந்துரைத்த அளவு மற்றும் மாத்திரைகளை உட்கொள்ளுங்கள். உங்களுக்கு தேவைப்பட்ட போதெல்லாம் நீங்களாகவே இந்த மாத்திரைகளை வாங்கி உட்கொள்ளாதீர்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.