தேர்தலில் ஒரு தொகுதியில் ஒரே பெயரில் பல வேட்பாளர்கள் (எடுத்துக்காட்டு: ஓபிஎஸ் பெயரில் ஐந்து பேர் போட்டி) போட்டியிடுவதை தடுக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது யாரோ ஒருவருக்கு ராகுல் காந்தி என பெயர் இருக்கிறது என்பதற்காக அவரை தேர்தலில் போட்டியிடாமல் தடுத்துவிட முடியுமா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் மனுவை விசாரிக்க மறுப்பு தெரிவித்தனர்.