அனைத்து இந்திய பிராண்டுகளின் மசாலா பொருட்களையும் சோதனைக்கு உட்படுத்த FSSAI உணவு பாதுகாப்பு அமைப்பு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் MDH மற்றும் Everest நிறுவன பிராண்டுகளின் மசாலா பொருட்களை சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் நாடுகள் தடை செய்யப்பட்டதை தொடர்ந்து FSSAI இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. எத்திலீன் ஆக்சைடு மற்றும் புற்றுநோய் அபாயங்களுடன் தொடர்புடையதாக இருப்பதாக கூறி சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் நாடுகள் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.