தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்தவர் தான் நடிகர் மயில்சாமி. காமெடி கதாபாத்திரங்களில் அதிகம் நடித்த மக்களை சிரிக்க வைத்தவர் சினிமாவை தாண்டி பலரின் பசியையும் போக்கியுள்ளார். இவர் நடிகர் ஆவதற்கு முன்பு பல பணிகளை செய்து தான் நடிகராக உயர்ந்தார். இப்படி பல புகழுக்குரிய இவர் கடந்த பிப்ரவரி மாதம் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் இவரின் மரணம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெயர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மயில்சாமி இறந்து 4 மாதங்கள் ஆன நிலையில் அவரது குடும்பத்தில் சோகமான விஷயங்கள் நடந்து வருகின்றன. அதாவது மயில்சாமியின் மகன்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்ட நிலையில் தற்போது இருவரின் மனைவிகளும் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்துள்ளனர். வீட்டில் மாமியார் மருமகள் சண்டை அதிகமாக இருப்பதால் விவாகரத்திற்கு இருவரும் சென்று உள்ளதாக கூறப்படுகின்றது.