குடியாத்தத்தில் நேற்று தேர்தல் பரப்புரையின்போது நடிகர் மன்சூர் அலிகானுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக சென்னை அழைத்து வரப்பட்டார். தொடர்ந்து ஐசியூவில் தீவிர சிகிச்சை பெற்று வரும் அவரது உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.