நடிகர் ரஜினிகாந்த் திரைப்படங்களில் நடிக்கும் பொழுது சாதாரணமான நேரத்தில் கூட தன் கையின் கட்டை மற்றும் பெருவிரலை சேர்த்து முத்ரா ஒன்றை பின்பற்றுவதை நாம் பார்த்திருப்போம். இதனை நாம் பல போட்டோக்களிலும் திரைப்படங்களிலும் பார்த்திருப்போம். ஆனால் அவர் ஏன் அவ்வாறு செய்கிறார் என்ற ரகசியம் தற்போது வெளியாகி உள்ளது.

இதுகுறித்து யோகா  நிபுணர்கள் கூறுகையில், ரஜினிகாந்த் இவ்வாறு செய்யும் பொழுது மூளை நரம்புகள் நன்றாக வேலை செய்வதோடு நினைவாற்றல் அதிகமாகி மன அழுத்தம், மூளை அழுத்தத்தை குறைக்கிறது. நரம்புகளுக்கு அமைதியை கொடுத்து கவனம் சிதராமல் வைக்கிறது. இதையறிந்த ரஜினி ரசிகர்கள் ரஜினிகாந்த் செய்யும் இந்த சின்ன விஷயத்தில் இவ்வளவு சக்தி இருக்கிறதா என்று ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.