தனுஷ் – ஐஸ்வர்யா விவகாரத்து பேச்சானது  தற்போது  பரவலாக பேசப்பட்டு வருகிறது . கடந்த 2004 ஆம் வருடம் இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் இவர்கள் இருவரும் சமீபத்தில் விவகாரத்தை கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் முறையிட்டனர். 2004 ஆம் வருடம் நடந்த தங்களுடைய திருமணம் செல்லாததாக அறிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பாக ரஜினிகாந்த் தனுஷை அழைத்து பேசியிருக்கிறார். தனுஷ் ரஜினி வீட்டிற்கு சென்றுள்ளார். அந்த சந்திப்பில் குழந்தைகளுக்காக இருவரும் சேர்ந்து வாழுமாறு ரஜினிகாந்த் தனுஷிடம் வலியுறுத்தியுள்ளார். ஆனால் எனக்கு விவகாரத்து வேண்டும் என்று உறுதியாக கூறிவிட்டாராம் ஐஸ்வர்யா. இதேபோல் தனுஷ் வீட்டார்களும் இருவரையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்களாம். ஆனால் அவை யாவும் பலன் கொடுக்க வில்லையாம். இதன் பிறகுதான் இருவரும் குடும்ப நல நீதிமன்றத்தில் விவகாரத்தை கேட்டு முறையிட்டுள்ளார்கள்.