தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியை சேர்ந்தவர்கள் விஜய் – புஷ்பலதா தம்பதி. இந்த தம்பதிக்கு 15 வருடங்களுக்கு முன்பு திருமணம் முடிந்த நிலையில் இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். இந்நிலையில் விஜய் புஷ்பலதாவை தனது சகோதரி வாங்கி இருக்கும் புதிய பிளாட்டை சுத்தம் செய்ய வேண்டும் என்று அழைத்துள்ளார்.

அங்கு சென்ற புஷ்பலதாவை விஜய் கத்தியால் குத்தி கொலை செய்ததோடு தலையை துண்டித்து ஓரமாக போட்டுள்ளார். பின்னர் பிளாட்டில் இருந்து ரத்தக்கரை படிந்த சட்டையுடன் வெளியில் வந்த விஜயை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

இதை அடுத்து விரைந்து வந்த போலீசார் விஜயை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் புஷ்பலதா மீதான சந்தேகத்தில் அவரை கொலை செய்தது தெரியவந்துள்ளது இதனை அடுத்து விஜயை கைது செய்து சிறையில் அடைத்தனர்.