பாஜகவிடம் திமுக சரணாகதி அடைந்து இருக்கிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர், நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவின் குரல் தமிழ்நாடு மக்களின் உரிமைக் குரலாக ஒலிக்கும். பொதுச் செயலாளரின் வியூகம் 100% தமிழக மக்களிடையே மிகப்பெரிய அளவில் வெற்றியைத் தேடித் தரும். திமுக பாஜகவிடம் சரணாகதி அடைந்து இருக்கிறது.

உடல் ஓர் இடத்திலும் உள்ளம் ஒரு இடத்திலுமாக திமுக இருக்கிறது. எதிர்கட்சியாக இருந்த திமுக பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டிவிட்டு, தற்போது அவரை நேரில் அழைப்பது என்பது என்ன நிலைப்பாடு? என கேள்வியெழுப்பியுள்ளார்.