மத்திய பிரதேசம் மாநிலத்தில் அரங்கேறியுள்ள மனிதாபிமற்ற செயல் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. சாலையில் அமர்ந்திருக்கும் ஒரு பழங்குடியின ஏழை மீது ஒரு நபர் சிறுநீர் கழித்துள்ளார். மத்திய பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தில் சாலையோரம்  ஒருவர் அமர்ந்து கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த நபர் ஒருவர் அந்த நபரிடம் மோசமான செயலில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அந்த நபர் மீது சிறுநீர் கழித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வர சிறுநீர் கழிக்கும் அந்த நபருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள்எழுந்துள்ளது.