சென்னை எழும்பூரில், நடைபெற்ற வேலைவாய்ப்பு (ரோஜ்கர் மேளா) விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு 533 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். அதற்கு  முன்பாக , அவர் பணிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, அவர் பணியில் சிறந்து விளங்க வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தேசிய தேர்வில் தேர்ச்சியானவர்கள் பணிபுரியும் மாநில மொழிகளையும் கற்க வேண்டும் என வலியுறுத்தினார். மத்திய அரசுப்பணிகளுக்கு தமிழக மாணவர்கள் குறைவாக விண்ணப்பிக்கின்றனர். இந்த நிலை முற்றிலும் மாற வேண்டும் எனக் கூறிய அவர், தமிழர்களின் விண்ணப்பம் குறைவதால் மத்தியப் பணிகளில் வடமாநிலத்தவர்கள் அதிகமாக தேர்வு செய்யப்படுகின்றனர் என்றார்