மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் நடப்பு தவணைக்கான அகவிலைப்படி நான்கு சதவீதம் உயர்த்தப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. இதனால் ஊழியர்கள் 50 சதவீதம் அகவிலைப்படி உயர்வை பெறுவார்கள். இதனைத் தொடர்ந்து வீட்டு வாடகை படி மற்றும் இதர சலுகையையும் கூடுதலாக ஊழியர்கள் பெறுவார்கள். வரவுள்ள லோக்சபா தேர்தலை முன்னிட்டு அரசு ஊழியர்களை ஈர்க்கும் வகையில் இந்த அறிவிப்புகள் வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 18 மாதங்களுக்கான அகவிலைப்படி நிலுவைத் தொகையும் விரைவில் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. அதேசமயம் நீண்ட நாட்களாக கோரிக்கையாக இருந்து வந்த ஓய்வூதிய திட்டத்திற்கான விதிமுறைகள் மாற்றம் செய்யப்பட உள்ளது. அதன்படி புதிய பென்ஷன் திட்டத்தில் ஊழியர்கள் இறுதியாக வாங்கிய வருமானத்தில் 40 முதல் 45 சதவீதம் வரை பென்ஷன் ஆக கிடைக்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.