மத்திய அரசு ஊழியர்களுக்கு வருடத்தில் இரண்டு முறை அகலவிலைப்படி உயர்வு வழங்கப்படும் நிலையில் கொரோனா காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 2021 வரை மூன்று தவணைகளுக்கான அகலவிலைப்படி உயர்வு ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் தற்போது வரவுள்ள லோக்சபா தேர்தலில் ஊழியர்களின் நன்மதிப்பை பெறுவதற்காக மத்திய அரசு இந்த நிலுவைத் தொகைகளை விரைவில் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாட்டின் பொருளாதார நிலையானது எதிர்மறையில் சென்றபோது இது போன்ற தொகையினால் தான் நிதிநிலை சீறாவதற்கு உறுதுணையாக இருந்ததாகவும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியிடும் எனவும் மக்களவையில் மத்திய நிதி அமைச்சகத்தின் இணை அமைச்சர் கூறியுள்ளார்.