மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகல விலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி ஜனவரி மாதத்துக்கான அகல விலைப்படி நான்கு சதவீதம் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 42 சதவீதம் அகலவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து ஊழியர்கள் ஜூலை மாதத்திற்கான அகல விலைப்படி உயர்வை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் தற்போது வரை இது குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகலவிலைப்படி தற்போது மூன்று சதவீதம் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு அதிகரிக்கப்பட்டால் இனி மத்திய அரசு ஊழியர்களுக்கு 45 சதவீதம் அகலவிலைப்படி வழங்கப்படும். அகில இந்திய ரயில்வே மேன்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர், ஊழியர்களின் அகல விலை படையை நான்கு சதவீதம் உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் மத்திய அரசு ஊழியர்களுக்கு மூன்று சதவீதம் மட்டுமே அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.